காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்- முதல்வர் மு.க ஸ்டாலின்
பஹல்காம் தாக்குலுக்கு பழிதீர்க்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆபேரஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காஷ்மீரைச் சேர்ந்த தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஆப்தாப், அப்பகுதி நிலவரங்களை கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
நிலைமை சீரடைந்ததும், மாணவர்கள் அனைவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு, வாட்ஸ் ஆப் எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கும், nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |