மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்துடன் ட்விட்டரில் தனது உடல்நிலை குறித்து தமிழக வீரர் நடராஜன் வெளியிட்ட முக்கிய பதிவு
காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய தமிழக வீரர் நடராஜன், மருத்துவமனை படுக்கையில் தான் படுத்திருக்கும் புகைப்படத்துடன் ட்விட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து தமிழக வீரர் நடராஜன் விலகினார்.
ஏப்ரல் 23ம் திகதி நடராஜன் விலகியதை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. துரதிஷ்டவசமாக தனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நடராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஏப்ரல் 27ம் திகதி மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்துடன் நடராஜன் வெளியிட்ட பதிவில், இன்று, நான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021
நிபுணத்துவம், கவனிப்பு மற்றும் மருத்துவ குழுவின் தயவு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிசிசிஐ மற்றும் எனக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நடராஜன் பதிவிட்டுள்ளார்.