பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு
பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு
பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது பயன்பாட்டிற்கானவை என்று மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த கருத்தை எதிர்த்து பெட்ரோலிய வர்த்தகர்கள் மற்றும் பெட்ரோலிய உரிமையாளர்களின் அமைப்பு கேரளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில் அவர்கள், "பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பொது மக்களின் அவசர தேவைக்காகவும், பொது பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்த முடியாது" என்று கூறியுள்ளனர்.
இதனை விசாரித்த நீதிபதி அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்டு, "மனுதாரர்களின் நிறுவனங்களில் உள்ள கழிப்பறைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம்" என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜூலை 17-ம் திகதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |