சர்வதேச கால்பந்தது போட்டிகளிலிருந்து பிரபல ஜேர்மனி வீரர் ஓய்வு! அதிரச்சியில் ரசிகர்கள்
யூரோ தொடரில் ரவுண்ட் 16 சுற்றில் வெளியேறியதை தொடர்ந்து சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல ஜேர்மனி கால்பந்து வீரர் டோனி குரூஸ் அறிவித்துள்ளார்.
யூரோ கால்பந்து தொடரில் ரவுண்ட் 16 சுற்றில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது ஜேர்மனி.
இந்நிலையில், ஜேர்மனி மிட்பீல்டர் டோனி க்ரூஸ் (31) சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தான் ஓய்வை சமூக வலைதளமான இன்ஸ்டகிராமில் க்ரூஸ் அறிவித்துள்ளார்.
இனி ஜேர்மன் தேசிய அணிக்காக விளையாட போவதில்லை என் அறிவித்துள்ள க்ரூஸ், 2022 கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தான் விளையாட மாட்டேன் என உறுதிப்படுத்தியுள்ளார்.
முக்கியமாக இனி ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவதில் முழு கவனம் செலுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை நம்பி களமிறக்கிய பயிற்சியாளர், தன்னை மேலும் ஊக்கப்படுத்தி விமர்சர்கள் மற்றும் இத்தனை ஆண்டுகள் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் க்ரூஸ் நன்றி தெரிவித்துள்ளார்.