பிரித்தானியாவில் சோதனைக்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! சிக்கிய 78 மில்லியன் பவுண்ட் கொண்ட பொருட்கள்
பிரித்தானியாவில் கிடங்கு ஒன்றில் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சுமார் 80 மில்லியன் பவுண்ட் கொண்ட போதைப் பொருள் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
பிரித்தானியாவின் Northampton-ல் உள்ள Brackmills Industrial Estate-ல் உள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்த போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், டெலிவாரி லொரி ஒன்றில் திருட்டு நடந்ததாக புகார் வந்ததையடுத்து, பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு அவர்கள் அங்கிருந்த பைகளை (Holdalls), திறந்து பார்த்த போது, உள்ளே போதை பொருட்கள் நிரப்பப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றை சோதனை செய்த போது, அதன் உள்ள போதைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பைகள் ஏராளமானவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக 780 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள், 18 பைகளில் நிரப்பப்பட்டு இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 78 மில்லியன் பவுண்டுகள் (21,01,70,91,232 கோடி ரூபாய்) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே ஏ வகை போதை பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் Emma James கூறுகையில், Northampton பொலிசாரால் ஏ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப் பெரிய நடவடிக்கை ஆகும். மொத்தமாக 780 கிலோ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வுக்குப் பிறகு, மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படும். இது ஒரு ஏ வகை போதை பொருள் என்பதால், அவ்வளவு சாதரணமான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியது.
எனவே இதை யார் இங்கு கொண்டு வந்தனர்? யார் இதற்கு பொறுப்பு? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும், ஒரு இரவுக்காக போதைப் பொருள் வாங்குவதில் என்ன பிரச்சனை என்று மக்கள் நினைக்கலாம், ஆனால் ஏ வகை போதை பொருளை பயன்படுத்தும் போது, அது நம்மை அடிமையாக்கிவிடும், இதனால் பல்வேறு குற்றம் சம்பங்கள் நடைபெறலாம். கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாக, இதன் முழு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.