மஞ்சளை அதிகளவில் சேர்த்து கொள்வது இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க
Migraine
Stomach ulcer
Kidney stone
blood pressure
By Kishanthini
அன்றாடம் சமையலுக்கு பயன்படும் ஒரு பொருள் தான் மஞ்சள். இது பெரும்பாலான உணவுகளில் தாராளமாக சேர்க்கப்படுகிறது, இது ஒரு பிரகாசமான மஞ்சள் நிறத்தையும் சூடான சுவையையும் தருகிறது.
இது பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் அளவுக்கு அதிகமான மஞ்சள் உங்கள் உடல்நலத்தை சீர்குலைத்துவிடும். எனவே எதையும் அளவோடு பயன்படுத்துவது சிறந்ததது.
அந்தவகையில் அதிகளவு மஞ்சள் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- அதிக குர்குமின் எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சினைகள், தலைவலி மற்றும் தோல் வெடிப்புக்கு வழிவகுக்கும்.
- மஞ்சளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலின் அளவு, வயிற்றுப் புண், வீக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும் மற்றும் குடல் அல்லது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
- மஞ்சள் இரத்த உறைதலைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் இது இரத்தப்போக்குக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
- இரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருப்பது ஆபத்தானது, மேலும் அதிக அளவு மஞ்சள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால், மஞ்சள் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
அலர்ஜிகளுக்கு கெட்டது
- பித்தப்பையில் கற்கள் உருவாக்கத்தை மஞ்சள் அதிகரிக்க செய்யும். இதுப்போக, காஸ்ட்ரோ ஈசோஃபேகில் ரிஃப்லக்ஸ் டிசார்டர் (GERD) பிரச்சனையை இன்னும் மோசமடைய தான் செய்யும். மஞ்சள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.
- ஈரல் வீக்கம் அல்லது பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் மஞ்சளை எடுத்துக் கொள்ள கூடாது. மஞ்சள் பொடியில் உள்ள குணங்கள் தற்போதிருக்கும் ஈரல் பிரச்சனைகளை மோசமடைய செய்யும்.
- பிறக்க போகும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையால், கர்ப்பிணி பெண்கள் பலரும் தாங்கள் குடிக்கும் பாலில் மஞ்சளை கலந்து குடிக்கின்றனர். இருப்பினும் சீக்கிரமே முதிர்சியடைகிற கருப்பை சுருக்கங்கள், கருப்பை இரத்த கசிவு அல்லது வலிமிக்க கருப்பை பிடிப்பு ஏற்படும் இடர்பாடு மஞ்சளால் அதிகமாக உள்ளது.
- மஞ்சளை உட்கொள்வதால் இனப்பெருக்க அமைப்பின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக ஆண்களுக்கு. அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால் விந்தணு உற்பத்தி குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.
- அளவுக்கு அதிகமான மஞ்சள் இரத்த உறைதல் செயல்முறையை தடுக்கும். அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாய் விளங்குகிறது.
- அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால், வயிற்று கோளாறுகள் ஏற்படும். இதனால் வயிற்று போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம். மஞ்சள் பொடியினால் ஏற்படும் முக்கியமான பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.
- உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மஞ்சள் பாதிக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுவிழக்க செய்யும் மஞ்சள்.
- உங்கள் உணவில் மஞ்சள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தால் அது குமட்டல் உணர்வை தான் ஏற்படுத்தும். மஞ்சள் பொடியால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.
- மஞ்சளால் ஒற்றைத் தலைவலியும் ஏற்படும். மதிய உணவிற்கு பிறகு, உங்களுக்கு மோசமான தலைவலி ஏற்பட்டால், அது உங்கள் உணவில் சேர்க்கப்பட்டிருந்த மஞ்சளால் தான் இருக்கும்.
- சில நேரங்களில் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து கொல்ல மஞ்சள் உதவினாலும், சில நேரங்களில் அப்படியே எதிர்மறையாக நடந்து கொள்ளும். அதனால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
- மஞ்சளால் சிறுநீரக கற்களும் உருவாகும். உங்கள் உணவில் உள்ள மஞ்சளால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US