அனைவரும் பயன்படுத்த வேண்டிய 5 அரசு ஆப்கள்
இன்றைய காலத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்ல, ஆவணங்களை பாதுகாப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்வது, அரசு சேவைகளை எளிதாகப் பெறுவது ஆகியவை நிதி மேலாண்மையின் முக்கிய பகுதிகளாகிவிட்டன.
இதற்காக இந்திய அரசு பல அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி ஒழுங்கை பேண அனைவரும் பயன்படுத்த வேண்டிய 5 அரசு ஆப்கள் இதோ...
1. DigiLocker
இந்த ஆப், ஆதார், PAN, ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை டிஜிட்டலாக பாதுகாக்க உதவுகிறது. இவை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவை.
2. UMANG
ஒரே ஆப்பில் EPFO, ஓய்வூதிய சேவைகள், பாஸ்போர்ட், யூட்டிலிட்டி பில், எரிவாயு முன்பதிவு, மாநில அரசு திட்டங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சேவைகளைப் பெறலாம்.
3. BHIM
UPI அடிப்படையிலான இந்த ஆப், வங்கி பரிமாற்றங்கள், QR கோடு மூலம் பணம் செலுத்துதல், பில் பேமெண்ட் போன்றவற்றை பாதுகாப்பாகச் செய்ய உதவுகிறது.
4. mAadhaar
ஆதாரை டிஜிட்டலாக வைத்திருப்பதற்கான ஆப். இதில் Virtual ID உருவாக்கலாம், பயோமெட்ரிக் லாக், ஆதார் விவரங்களை பாதுகாப்பாகப் பகிரலாம்.
5. mParivahan
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், வாகனத்தின் மற்ற விவரங்கள் போன்றவற்றை டிஜிட்டலாக சேமிக்க உதவுகிறது. போக்குவரத்து சேவைகளையும் எளிதாக அணுகலாம்.
இந்த ஆப்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் தேவையை குறைத்து, ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, அடையாள ஆவணங்கள் மற்றும் நிதி தகவல்களை எளிதாக அணுகும் வசதி கிடைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |