இளவரசர் பிலிப் இறுதி சடங்கின் போது மேலாடையின்றி சாலையில் ஓடிய பெண்! ஏதற்காக? வெளியான வீடியோ
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பெண் ஒருவர் மேலாடையின்றி சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானியா மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்(99) கடந்த வாரம் காலமானார். அவருடைய இறுதி சடங்கு ஏப்ரல் 17ம் திகதி விண்ட்சர் கோட்டையில் நடைபெற்றது.
இளவரசர் பிலிப்பின் பூத உடல் விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கின் போது கோட்டைக்கு வெளியே மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென பெண் ஒருவர் மேலாடையின்றி ‘Save the Planet’ பூமியை பாதுகாக்க வேண்டும் என கூச்சலிட்ட படி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணை விரட்டி பிடித்து சட்ட அமலாக்கத்துறையினர், அவரை போர்வையில் போர்த்தி கைது கைது செய்து அழைத்துச்சென்றனர்.
2/2 pic.twitter.com/E68KhRasTh
— Farid Qureshi (@FaridQureshi_UK) April 17, 2021
மேலாடையின்றி போராடத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் போர்வையில் போர்த்தி கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியானது.