இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது மேலாடையின்றி ஓடி பரபரப்பை ஏற்படுத்திய பெண் யார்? வெளியான முழு தகவல்
பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது, விண்ட்ஸடரில் பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடிய சம்பவத்தில், அந்த பெண் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியா மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்(99) கடந்த 9-ஆம் திகதி காலமானார். அவருடைய இறுதி சடங்கு நேற்று முன் தினம் விண்ட்ஸ்டர் கோட்டையில் நடைபெற்றது.
இதையடுத்து அவரின் பூத உடல் விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இறுதி சடங்கின் போது கோட்டைக்கு வெளியே மக்கள் கூடியிருந்த போது, திடீரென பெண் ஒருவர் மேலாடையின்றி Save the Planet பூமியை பாதுகாக்க வேண்டும் என கூச்சலிட்ட படி ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
Topless woman arrested outside Windsor Castle during Prince Philip’s funeral.#PrincePhilipfuneral
— Farid Qureshi (@FaridQureshi_UK) April 17, 2021
1/2 pic.twitter.com/IxAtOelN63
அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணின் பெயர் Marissa Scott எனவும், 55 வயது மதிக்கத்தக்க இவர் Surrey-யின் Merstham பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண் மீது, பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல், எச்சரிக்கை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர், வரும் ஜுன் மாதம் 10-ஆம் திகதி Slough Magistrates நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.