பிரித்தானிய பிரதமர் ரிஷியின் பதவியைக் கவிழ்க்க தீவிர திட்டம்
பிரித்தானியாவில் இந்த வாரம் மூன்று இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அவற்றில் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, லேபர் கட்சி அந்த மூன்று இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரிஷியின் பதவியைக் கவிழ்க்க தீவிர திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாரை அடுத்த பிரதமராக்க திட்டம்?
ரிஷிக்கு பதிலாக, பிரதமர் வேட்பாளர் போட்டியில் பங்கேற்றவரான பென்னி மோர்டான்டை பிரதமராக்கவும், பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கெமி பெடனோக் மற்றும் ராபர்ட் ஜென்ரிக் ஆகியோருக்கு மீண்டும் பதவி வழங்கவும், சில கன்சர்வேட்டிவ் கட்சியினர் சிலர் தீவிர முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த தகவலை பென்னி மோர்டான்ட் மறுத்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டுமானால், 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக கடிதங்கள் கொடுக்கவேண்டும். ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |