லண்டனில் பெண்ணை மோசமாக படம் பிடித்த நபருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லண்டனில் பொது இடத்தில் இளம் பெண்ணை மோசமாக படம் பிடித்த நபரை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் Bank Underground இரயில்வே நிலையத்தில், Martin Stone(62) என்ற நபர், அங்கிருக்கும் பெண் எஸ்க்லேட்டரில் சென்ற போது, அந்த பெண்ணின் ஆடைக்கு கீழே ஸ்பை கமெரா மூலம் வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபர் அடுத்த 24 மணி நேரத்திலே பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், இளம் பெண்ணை அவருக்கே தெரியாமல், படம் பிடித்த Martin Stone(62) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இரயில் நிலையத்தில் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்த போது, இந்த நபர் குறித்த பெண்ணை பின்பற்றி சென்றவது தெளிவாக பதிவாகியிருந்தது. அதுமட்டுமின்றி அந்த நபரிடம் விசாரித்த போது, குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, கடந்த 4-ஆம் திகதி Highbury Corner Magistrates' நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட Martin Stone இஸ்ரேலில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ளார். ஆனால் என்ன காரணத்திற்காக வந்துள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இது போன்ற நிலையில் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
இவர் 10 நாள் சிறை தண்டனை முடிந்து அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாகவும், அவரிடம் இருந்த ஸ்பை கேமரா, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் மெமரி கார்ட் போன்றவற்றை முற்றிலும் அழித்துவிடும் படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.