பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த நபர்... ஜேர்மனியிலும் ஒரு பரபரப்பு சம்பவம்
நேற்று பிரான்சில் பொலிசாரை தாக்கிய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், ஜேர்மன் நகரமொன்றிலும் ஒருவர் பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜேர்மன் நகரமான Hamburgஇல் ஒருவர் கார்களை சேதப்படுத்துவதாகவும், கத்தியைக் காட்டி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டுவதாகவும் பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர் அல்லாஹூ அக்பர் என கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளனர். பொலிசாரைக் கண்டதும், அவர் கத்தியுடன் பொலிசாரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.
முதலில் அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தும் டேஸர் கொண்டு தாக்கியும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
ஆகவே, பொலிசார் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட, சிறிது நேரத்தில்
உயிரிழந்துள்ளார் அவர்.
அவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர், எதற்காக தாக்குதல்களில் ஈடுபட்டார்
என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.