பிரித்தானிய பிரதமரின் திட்டத்தை வைத்தே பணம் பார்க்கும் ஆட்கடத்தல் கும்பல்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
இப்போது, அதை வைத்தே புலம்பெயர்வோரிடம் விளம்பரம் செய்கிறார்கள் ஆட்கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள்.
யாரும் நாடுகடத்தப்படமாட்டீர்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
Credit: Stuart Brock
அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய உதவும் ஆட்கடத்தல் கும்பல்கள், இனி யாரும் எங்கும் நாடுகடத்தப்படமாட்டீர்கள் என விளம்பரம் செய்யத் துவங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் சமூக ஊடகமான டிக்டாக்கில் வெளியான சோமாலிய மொழி விளம்பரம் ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய விரும்பும் சோமாலியர்களைக் குறிவைத்து, ருவாண்டா திட்டம் முடிவுக்குவந்துவிட்டது, இனி ஒருவர் கூட எங்கும் நாடுகடத்தப்படமாட்டீர்கள் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எங்களுடன் பயணித்தால் நீங்கள் பிரித்தானியாவில் இருப்பீர்கள் என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.
பாதுகாப்பாக பிரித்தானியாவுக்குள் அழைத்துச் செல்ல 2,500 பவுண்டுகள் (3K யூரோக்கள்) கட்டணம் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |