ஜேர்மனிக்கு சுற்றுலாவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல்
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த தன் சக நாட்டுப் பெண் ஒருவரை வன்புணர்ந்து கொலை செய்ததாக, அமெரிக்கர் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பெண்கள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva Liu, 21) மற்றும் கெல்சி (Kelsey Chang, 22) என்னும் இரண்டு இளம்பெண்கள், ஜேர்மனியிலுள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனிக்கு வருகிறார்கள்.
கொடூர நபரிடம் சிக்கிய பெண்கள்
அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராய் (Troy Philipp Bohling, 31) என்னும் நபர், தான் அந்த மாளிகையை ரொமாண்டிக்கான ஒரு இடத்திலிருந்து காண உதவுவதாகக் கூறி ஈவா மற்றும் கெல்சியை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அந்த இடத்துக்குச் சென்றதும், ட்ராய் ஈவாவை தரையில் தள்ளி அவரது உடைகளைக் களைய முற்பட்டிருக்கிறார். கெல்சி அவரைத் தடுக்க முயல, அவரைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார் ட்ராய். கெல்சி 160 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கெல்சி கீழே விழுந்ததைக் கண்டபிறகும் ஈவாவை விடாத ட்ராய், சுயநினைவிழக்கும் வரை அவரது கழுத்தை நெறித்து, வன்புணர்ந்து, பின்னர் அவரையும் 160 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
கீழே விழுந்த கெல்சிக்கு தலையில் அடிபட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஈவா உயிரிழந்துவிட்டார்.
ட்ராய் மீது ஜேர்மனியில், கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், தான் ஈவாவை வன்புணர்ந்து கொலை செய்ததாக ட்ராய் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
WHATSAPP |