காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள்
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழக்கும் முன், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை கூட அளிக்க முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக, அந்த இளம்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்
இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த திருமலேஷ் (Thirumalesh Chellamal Hemachandran), ரேவதி (Revathi Malesh Thirumalesh) தம்பதியரின் பிள்ளைகள் வர்ஷன் (Varshan Chellamal Thirumalesh) மற்றும் சுதிக்ஷா (Sudiksha Thirumalesh, 19).
சுதிக்ஷா, அபூர்வ மைட்டோகாண்ட்ரியா நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளாள். சுதிக்ஷா ஓராண்டாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கனடா போன்ற ஒரு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாள் அவள். ஆனால், அவள் வேகமாக உயிரிழந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டிருக்கிறது மருத்துவமனை.
dailymail
கடைசியாக நீதிமன்றம் காப்பாற்றும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றமோ, வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டதுடன், Mrs Justice Roberts என்னும் நீதிபதியும், தன் சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் நிலையில் சுதிக்ஷாவின் மன நிலை இல்லை என்னும் தீர்ப்பையே அளித்துள்ளார்.
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுதிக்ஷாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்காக நிதி திரட்டமுடியாமல் போயுள்ளது அவளது குடும்பத்துக்கு.
dailymail
தானாக முடிவெடுக்க முடியாதவர்களுக்காக இயங்கும் Court of Protection என்னும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமலே கண்ணை மூடிவிட்டாள் சுதிக்ஷா. ஆம், செப்டம்பர் 12அம் திகதி சுதிக்ஷா மரணமடைந்துவிட்டாள்.
காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்
இந்நிலையில், தன் சகோதரியின் உயிரைக் காப்பாற்றக் கோரி, தன் தந்தை மருத்துவர்களின் காலில் விழுந்து கதறியும், மருத்துவர்கள் தன் சகோதரிக்கு உதவ மறுத்துவிட்டதாக சுதிக்ஷாவின் சகோதரர் வர்ஷன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி, சுதிக்ஷா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்கள் கடிதம் ஒன்றை அவளது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளார்கள். அதில், அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் சுதிக்ஷா உயிரிழக நேரலாம் என்றும், ஆகவே, அவளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை (CPR) முதலான எந்த சிகிச்சையும் அளிக்கமாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
பிள்ளையை எப்படியாவது வெளிநாடு கொண்டு சென்று அவள் உயிரைக் காப்பாற்ற அவளது குடும்பம் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்களோ, அவலது செயற்கை சுவாசத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளார்கள். விளைவு, தங்கள் கண் முன்னாலேயே சுதிக்ஷா கண்ணை நிரந்தரமாக மூடிவிட்டதாக தெரிவிக்கிறார் வர்ஷன்.
பிரித்தானியாவில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆல்பி என்ற சிறுவனுக்கும் இதேபோல் நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், மகளை இழந்த சுதிக்ஷாவின் பெற்றோர், தங்கள் மகளைக் கைவிட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் அனுமதிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |