காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள்

United Kingdom India Indian Origin
By Balamanuvelan Sep 25, 2023 07:08 AM GMT
Report

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழக்கும் முன், அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை கூட அளிக்க முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக, அந்த இளம்பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த திருமலேஷ் (Thirumalesh Chellamal Hemachandran), ரேவதி (Revathi Malesh Thirumalesh) தம்பதியரின் பிள்ளைகள் வர்ஷன் (Varshan Chellamal Thirumalesh) மற்றும் சுதிக்‌ஷா (Sudiksha Thirumalesh, 19).

சுதிக்‌ஷா, அபூர்வ மைட்டோகாண்ட்ரியா நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளாள். சுதிக்‌ஷா ஓராண்டாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கனடா போன்ற ஒரு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாள் அவள். ஆனால், அவள் வேகமாக உயிரிழந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டிருக்கிறது மருத்துவமனை.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

dailymail

கடைசியாக நீதிமன்றம் காப்பாற்றும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்றால், நீதிமன்றமோ, வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டதுடன், Mrs Justice Roberts என்னும் நீதிபதியும், தன் சிகிச்சை குறித்து முடிவெடுக்கும் நிலையில் சுதிக்‌ஷாவின் மன நிலை இல்லை என்னும் தீர்ப்பையே அளித்துள்ளார்.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுதிக்‌ஷாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவதற்காக நிதி திரட்டமுடியாமல் போயுள்ளது அவளது குடும்பத்துக்கு.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

dailymail

தானாக முடிவெடுக்க முடியாதவர்களுக்காக இயங்கும் Court of Protection என்னும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், வெளிநாடு சென்று சிகிச்சை பெறவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாமலே கண்ணை மூடிவிட்டாள் சுதிக்‌ஷா. ஆம், செப்டம்பர் 12அம் திகதி சுதிக்‌ஷா மரணமடைந்துவிட்டாள்.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்

இந்நிலையில், தன் சகோதரியின் உயிரைக் காப்பாற்றக் கோரி, தன் தந்தை மருத்துவர்களின் காலில் விழுந்து கதறியும், மருத்துவர்கள் தன் சகோதரிக்கு உதவ மறுத்துவிட்டதாக சுதிக்‌ஷாவின் சகோதரர் வர்ஷன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி, சுதிக்‌ஷா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்கள் கடிதம் ஒன்றை அவளது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளார்கள். அதில், அடுத்த 12 முதல் 24 மணி நேரத்தில் சுதிக்‌ஷா உயிரிழக நேரலாம் என்றும், ஆகவே, அவளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை (CPR) முதலான எந்த சிகிச்சையும் அளிக்கமாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

பிள்ளையை எப்படியாவது வெளிநாடு கொண்டு சென்று அவள் உயிரைக் காப்பாற்ற அவளது குடும்பம் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவர்களோ, அவலது செயற்கை சுவாசத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளார்கள். விளைவு, தங்கள் கண் முன்னாலேயே சுதிக்‌ஷா கண்ணை நிரந்தரமாக மூடிவிட்டதாக தெரிவிக்கிறார் வர்ஷன்.

பிரித்தானியாவில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆல்பி என்ற சிறுவனுக்கும் இதேபோல் நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், மகளை இழந்த சுதிக்‌ஷாவின் பெற்றோர், தங்கள் மகளைக் கைவிட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் அனுமதிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காலில் விழுந்து கதறியும் உதவ மறுத்த மருத்துவர்கள்: இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் சகோதரர் கூறும் பதறவைக்கும் தகவல்கள் | Tragic 19 Year Old Lock In Legal Battle Over Care

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US