விடைபெறுகிறேன்... குதிரையிலிருந்து விழுந்து முதுகெலும்பு உடைந்ததால் இளம்பெண் எடுத்த துயர முடிவு
குதிரையேற்ற வீராங்கனையான பிரித்தானிய இளம்பெண் ஒருவர், குதிரையிலிருந்து விழுந்து முதுகெலும்பு உடைந்ததால், கடும் அவதியுற்றுவந்த நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
குதிரையேற்ற வீராங்கனை
பிரித்தானியாவின் எசெக்சை சேர்ந்தவரான கரோலின் (Caroline March, 31), ஒரு குதிரையேற்ற வீராங்கனை. குதிரையுடன் தடை தாண்டும் போட்டிகளில் சிறந்துவிளங்கியவரான கரோலின், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி, விளையாட்டுப் போட்டி ஒன்றின்போது குதிரையிலிருந்து தூக்கிவீசப்பட்டு நினைவிழந்தார்.
தனது முதுகெலும்பில் அடிபட்டு இரண்டு ஆண்டுகளாக போராடி வந்தார் கரோலின்.
துயர முடிவு
இந்நிலையில், கடந்த வாரம், அதாவது, மார்ச் மாதம் 23ஆம் திகதி, மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் கரோலின்.
தனது முடிவு குறித்து பேஸ்புக்கில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள கரோலின், தான் சொந்தக் காலில் நின்றே பழகியவள் என்றும், விபத்துக்குப் பின் மற்றவர்களிடம் எல்லா விடயங்களுக்கு உதவி கேட்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொள்ளும் விடயத்தில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு என்று தெரிவித்துள்ள கரோலின், நான் விரும்பும் தரமான வாழ்க்கை எனக்குக் கிடைக்காத பட்சத்தில், நான் இந்த முடிவைத்தான் எடுப்பேன் என்று எப்போதுமே நான் கூறுவதுண்டு என்றும், விபத்துக்குப் பின் வாழ்க்கை இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என நினைக்கவில்லை என்றும், இப்படி ஒரு நிலை ஏற்படும் என உண்மயாகவே தான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை என்றும் கூறியுள்ள கரோலின், நான் எத்தகைய பாதையில் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்பதை யாராலும் உண்மையாக புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |