பிஞ்சு மகளை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் குதித்த தந்தை... பின்னர் நடந்த கோர சம்பவம்

Sydney Indian Origin
By Arbin Jul 22, 2024 04:28 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் பிஞ்சு குழந்தைகள் இருவருடன் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய தள்ளுவண்டியால், தந்தையுடன் இருவர் கொல்லப்பட்ட கோர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது

தொடர்புடைய விபத்தின் கமெரா காட்சிகள் தற்போது வெளியாகி, பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது. தெற்கு சிட்னியின் Carlton ரயில் நிலையம் அருகாமையிலேயே ஞாயிறன்று குறித்த கோர விபத்து நடந்துள்ளது.

பிஞ்சு மகளை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் குதித்த தந்தை... பின்னர் நடந்த கோர சம்பவம் | Tragic Moments Dad Daughter Train Tracks Killing

இந்தியர்களான ஆனந்த் மற்றும் பூனம் ரன்வால் தம்பதி சம்பவத்தின் போது தங்களின் 2 வயதேயான இரட்டைக் குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற மனைவிக்காக தமது பிள்ளைகள் இருவருடன் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார் ஆனந்த். அதே வேளை அவர் தனது அலைபேசியிலும் கவனம் செலுத்தியுள்ளார்.

அப்போது திடீரென்று தள்ளுவண்டியின் கட்டுப்பாட்டை ஆனந்த் இழந்ததாக கூறப்படுகிறது. அது மெல்ல நகர்ந்து ரயில் தண்டவாளத்தில் சென்றுள்ளது. சற்றும் தாமதிக்காத ஆனந்த் தமது மகளை காக்கும் பொருட்டும் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக கடந்து சென்ற ரயிலில் சிக்கி தந்தையும் மகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த கோர சம்பவத்தை சக பயணிகள் பலர் நேரில் பார்த்துள்ளனர். அத்துடன், தமது மகளை காப்பாற்றும் பொருட்டு, ஆனந்த் ரயில் தண்டவாளத்தில் குதித்ததையும் அவர்கள் அதிர்ச்சியுடன் கண்டு நின்றனர்.

பிஞ்சு மகளை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் குதித்த தந்தை... பின்னர் நடந்த கோர சம்பவம் | Tragic Moments Dad Daughter Train Tracks Killing

இன்னொரு குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பூனம் வேதனையில் அலறியுள்ளார். அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திங்களன்று சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாராலும் தேற்றமுடியவில்லை

இதனிடையே, இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவிக்கையில், காப்பாற்றப்பட்ட இன்னொரு குழந்தை லேசான காயங்களுடனே தப்பியுள்ளது என்றார். அந்த தாயாரின் அலறல் சத்தம் கேட்டு, தாம் அவருக்கு உதவும் பொருட்டு விரைந்ததாக குறிப்பிட்டுள்ள அந்தப் பெண்,

தண்டவாளத்தில் குதிக்க முயன்ற அவரை தாம் கட்டுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினரை அணுகவே நொறுங்கிப் போன அந்த தாயார் அனுமதிக்கவில்லை என்றும், அவரை அப்போது யாராலும் தேற்றமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிஞ்சு மகளை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் குதித்த தந்தை... பின்னர் நடந்த கோர சம்பவம் | Tragic Moments Dad Daughter Train Tracks Killing

சில நொடிகளிலேயே மொத்தமும் நடந்து முடிந்துவிட்டது. ஆனந்த் மற்றும் இரட்டையர்களில் ஒரு குழந்தையும் ரயிலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ள நிலையில், ஆனந்த் மற்றும் பூனம் ரன்வால் தம்பதி 2023 அக்டோபர் மாதம் தங்களின் இரட்டையர்களான மகள்களுடன் சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

பொலிசார் முன்னெடுத்துள்ள முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளுடன் தள்ளுவண்டி வேகமாக தண்டவாளம் நோக்கி நகர காரணம் பலத்த காற்றாக இருக்கலாம் என்றும், சில நொடிகள் மட்டுமே ஆனந்தின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த தள்ளுவண்டி தவறியது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US