தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை!
தெற்கு பிரான்சில் திருமண நாளில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் மணப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண் சுட்டுக் கொலை
பிரான்சின் தெற்குப் பகுதியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மணமகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் திகிலூட்டும் சம்பவமாக மாறியுள்ளது.
முகமூடி அணிந்த, ஆயுதம் தாங்கிய கும்பல் மணமகனையும், மணமகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
13 வயது குழந்தை ஒன்றுடன் காரில் திருமண விருந்தை முடித்துவிட்டு தம்பதியினர் கிளம்பும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, அதிகாரிகள் "திட்டமிட்ட கும்பல் கொலை மற்றும் கொலை முயற்சி" என்ற பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
27 வயதான மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க மணமக்கள் ஓட்டிச் சென்ற வாகனம், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் மீது மோதியதில் அவனும் கொல்லப்பட்டான் என பிரெஞ்சு நாளிதழான லெ ஃபிகாரோ தெரிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் தென்கிழக்கு பிரான்சில் உள்ள அவிக்னானுக்கு அருகில் உள்ள கூல்ட் (Goult) என்ற கிராமத்தில் நடந்துள்ளது. மணப்பெண்ணின் மரணம் தவிர, மணமகன், அவரது சகோதரி மற்றும் 13 வயது குழந்தை ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
கூல்ட் நகர மேயர் டிடியர் பெரெல்லோ (Didier Perello), இந்தத் தாக்குதல் "குறிவைக்கப்பட்டது" என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் "கோபமாகவும், அதிர்ச்சியாகவும், நிலைகுலைந்துள்ளதாகவும்" லெ ஃபிகாரோ நாளிதழ் மேற்கோள் காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |