சுவிஸ் மாகாணம் ஒன்றில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவல்... கடுமையாக பாதிக்கப்பட்ட ரயில் சேவை
சுவிஸ் மாகாணம் ஒன்றில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுவிஸ் மாகாணமான Solothurnஇல், நேற்று இரவு 9 மணியளவில் ரயில் ஒன்றில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட, ரயில் முழுவதும் சோதனையிட்டும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
அந்த ரயில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல ரயில்கள் தாமதமாகின, சில ரத்து
செய்யப்பட்டன. இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 49 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.