சுவிட்சர்லாந்தில் கார் மீது மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்ணும் குழந்தையும்
சுவிட்சர்லாந்தில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது, வேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில், அந்தக் காரில் பயணித்த பெண்ணும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
கார் மீது மோதிய ரயில்
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.
ஆனால், காரை நடுவழியில் நிறுத்தியுள்ளார் அந்தப் பெண். ரயில் நெருங்க, அவர் காரிலிருந்து வேகமாக இறங்கியதுடன், அந்தக் குழந்தையையும் காரிலிருந்து இறக்கி அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.
கார் மீது மோதிய ரயில், காரை வெகு தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
ஆகவே, அந்த 83 வயது பெண்ணும், அவருடன் காரில் பயணித்த குழந்தையும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், எதனால் அந்தப் பெண் நடுவழியில் காரை நிறுத்தினார் என்பதை அறிவதற்காக பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |