பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: தமிழகத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு
தெலுங்கானாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் கீழே விழுந்தது நொறுங்கியதில் தமிழகத்தை சேர்ந்த பெண் விமானி உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவின் குண்டூர் பகுதியலிருந்து சென்றுகொண்டிருந்த ஹைதராபாத்தின் விமான பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான பயிற்சி விமானம் தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இதில் விமானத்தின் விமானி மற்றும் பயிற்சி விமானி என இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த விமானத்தில் உயிரிழந்துள்ள பயிற்சி விமானி தமிழகத்தை சேர்ந்த மகிமா எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் வருவாய் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையையும் நல்கொண்டா பகுதி பொலிஸார் நடத்திவருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற பயிற்சி விமான விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.