திருநங்கையாக மாறிய நபருக்கு பெற்றோர்களால் நேர்ந்த சோகம்! உறைய வைக்கும் சம்பவம்
இந்தியாவில் திருநங்கையாக மாறிய சொந்த மகனையே அடி ஆட்கள் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி(45). இவருக்கு 19 வயதில் நவீன்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார்.
இதனிடையே கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன் குமாரை காயங்களுடன் அவரது தாயார் மீட்டுள்ளார். இதையடுத்து உடனே அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் முதற்கட்டமாக அவரது தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை அடித்து வலுக்கட்டடாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது அம்பலமானது.
இதையடுத்து நவீன்குமாரை கொலை செய்த காரணத்தால் உமாதேவியை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேரையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.