பிரித்தானிய நகரம் ஒன்றிற்கு புதிதாக குடிபெயர்ந்த இளம்பெண்... சந்தித்த பயங்கர அனுபவத்தால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி
பிரித்தானிய நகரம் ஒன்றிற்கு புதிதாக குடிபெயர்ந்த இளம்பெண் ஒருவர் சந்தித்த பயங்கர அனுபவம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பர்மிங்காமிலிருந்து கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள Middleton என்ற நகரத்துக்கு சமீபத்தில்தான் குடிபெயர்ந்துள்ளார் அந்த இளம்பெண்.
புதன்கிழமையன்று வாக்கிங் சென்ற அந்தப் பெண் வழியில் ஒரு ஆண் நிற்பதைக் கவனித்துள்ளார். அவர் எதிர்பராத நேரத்தில் அவருக்குப் பின்னால் வந்த அந்த ஆண், சட்டென ஒரு கையால் அந்தப் பெண்ணின் வாயைப் பொத்திவிட்டு, மறுகையால் அவரது இடுப்பை இறுக்கிப் பிடித்துள்ளார்.
அத்துடன், அமைதியாக இரு, சத்தம் போடாதே, என்னிடம் ஒரு கத்தி இருக்கிறது என அவர் மிரட்ட, மிரண்டுபோனாலும், அவரது கையைத் தள்ளிவிட்டு விட்டு கூச்சல் போட்டிருக்கிறார் அந்தப் பெண். உடனே அந்த ஆள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
Credit: GMP
இந்த சம்பவம் புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் நடந்த நிலையில், கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் அந்த பயங்கர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள அந்த மர்ம நபரின் உருவத்தைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு பொலிசார் அவரைத் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில், இப்போதுதான் அந்தப் பகுதிக்கு அந்த இளம்பெண் குடிவந்த நிலையில், அவர் சந்தித்த இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பெண் கடும் அதிர்ச்சிக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்.
Credit: GMP