பிரித்தானியாவின் பிரபல நகரங்களுக்கு பயணிக்க தடை விதித்த அண்டை நாடு!
வெளியான முக்கிய அறிவிப்பு பிரித்தானியாவின் பிரபல நகரங்களுக்கு பயண மேற்கொள்ள அண்டை நாடான ஸ்காட்லாந்து தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவில் டெல்டா மாறுபாடு பரவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே, யூரோ தொடரில் நாளை ஜூன் 19ம் திகதி லண்டன் Wembley மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து மோதும் போட்டியை காண டிக்கெட் இருந்தால் மட்டும் ரசிகர்கள் இங்கிலாந்திற்கு பயணிக்க வேண்டும் என ஸ்காட்லாந்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஸ்காட்லாந்திலிருந்து மான்செஸ்டர் மற்றும் Salford-க்கு அத்தியாவசியமின்றி பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் Nicola sturgeon இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.
மான்செஸ்டர் மற்றும் Salford-ல் கொரோனா பரவல் அதிகளவில் உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, Blackburn மற்றும் Bolton-க்கு பயணிக்க ஸ்காட்லாந்து தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.