கனடா, பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கம்! அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவல் ருத்ரதாண்டவம் ஆடி வந்த நிலையில், தற்போது அங்கு கொரோனா நிலைமை சீராகியுள்ளதால், 20 மாதங்களுக்கு பிறகு அந்நாடு கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனாவால் 4.73 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 3.73 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 7.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள், ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தவித்து வந்தனர். விமான சேவை நிறுவனங்களும் பெரும் இழப்பை சந்தித்தன.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் சற்றுகுறைந்துள்ளதால் 20 மாதங்களுக்குப் பிறகு நேற்று பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளைசேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவை காண்பிக்க வேண்டும்.
கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமேஅமெரிக்கா செல்ல அனுமதிக் கப்படுவர். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு விமான பயணத்துக்கு ஒருநாள் முன்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும்
.
அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவையை இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பயணிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.