பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 56 அகதிகள் மீட்பு!
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 56 அகதிகள் மீட்க்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் Calais, Dunkerque மற்றும் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியங்களில் இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது.
சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி சென்றுள்ளனர்.
இவர்களை கடற்பிராந்திய காவல்துறையினர் மீட்டுள்ளனர். மொத்தமாக 56 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர் என தகவல் கூறுகின்றது.
அதில் மீட்க்கப்பட்டவர்களில் ஆறு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.