வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம்

Turkey Germany
By Balamanuvelan Apr 22, 2026 04:47 AM GMT
Report

ஜேர்மன் குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், குடும்பமே உடல் நலம் பாதிக்கப்பட்டு பலியான விடயம் நினைவிருக்கலாம்.

அந்த விடயம் தொடர்பில் இஸ்தான்புல்லில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.

சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்

கடந்த ஆண்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த Servet (38), அவரது மனைவியான Cigdem Bocek (27), பிள்ளைகள் Masal (3) Kadir Muhammet (6), ஆகியோர், துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். 

வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம் | Trial Begins In Istanbul On Germany Tourists Death

பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிரபல உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆனால், முதலில் பிள்ளைகள், அடுத்து தாய், பின்னர் தந்தை என மொத்தக் குடும்பமும் பலியாகிவிட்டது.

அவர்கள் பல்வேறு தெருவோரக் கடைகளில் பல உணவுகளை சுவைத்த நிலையில், அந்த உணவுகளில் ஏதோ ஒன்றுதான் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் என முதலில் கருதப்பட்டது. 

ஜேர்மனியில் சீக்கியர்களிடையே மோதல்: வெளியாகியுள்ள காட்சிகள்

ஜேர்மனியில் சீக்கியர்களிடையே மோதல்: வெளியாகியுள்ள காட்சிகள்

ஆனால், Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டலில் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்காக பூச்சி மருந்து அடிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அந்த பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து வெளியான நச்சுக் காற்றே Servet குடும்பம் பலியாகக் காரணம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை துவக்கம்

அந்த துயர சம்பவம் தொடர்பில் செவ்வாயன்று துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரில் வழக்கு விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம் | Trial Begins In Istanbul On Germany Tourists Death

Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டல் உரிமையாளர், வரவேற்பாளர், பூச்சி மருந்து அடித்த துறை அலுவலர்கள் உட்பட ஆறு பேர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் Servet குடும்பத்தின் துயர மரணத்துக்கு தாங்கள் காரணம் அல்ல என மறுத்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களில் ஐந்து பேருக்கு 22 ஆண்டுகள் வரையும், ஆறாவது நபருக்கு 15 ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், உயிரிழந்த Servet குடும்பத்தினரின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் கடும் தண்டனை விதிக்கவேண்டும் என கோரியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US