மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர்: ஜேர்மனியில் வழக்கு விசாரணை துவக்கம்
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் தொடர்பிலான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர்
பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக் கூட்டத்தின் மீது வேகமாகக் காரைக் கொண்டு மோதினார்.

அந்த பயங்கர சம்பவத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றும், அதன் தாயாகிய 37 வயதுப் பெண்ணும் பலியானார்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் காயமடைந்தார்கள்.
ஆப்கன் நாட்டவரான அந்த நபருடைய பெயர் Farhad N (25). புகலிடம் கோரி ஜேர்மனி வந்திருந்தார் அவர். அவருடைய புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூற, அவரோ, தான் சட்டப்படிதான் ஜேர்மனியில் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டபோது, உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்காக, தான் ஜேர்மனியில் யாரையாவது கொல்ல கடமைப்பட்டுள்ளதாக தான் நம்புவதாகத் தெரிவித்திருந்தார் அவர்.
இந்நிலையில், Farhad மீதான வழக்கு விசாரணை இன்று மியூனிக் நீதிமன்றம் ஒன்றில் துவங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் அந்த வழக்கு விசாரணை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |