பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: கணவர் கோபம்
பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண் வழக்கில், அவரது துயர முடிவுக்குக் காரணம் முக்கோணக் காதல் என பிரான்ஸ் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த Karen Carter (65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவசர உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
உடற்கூறு ஆய்வில், Karen தன்னை பயங்கரமாக தாக்க முயன்ற நபரைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Karenஉடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என பிரான்ஸ் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கணவர் கோபம்
ஆனால், Karenஉடைய கணவரான ஆலன் (Alan Carter, 65), தன் மனைவி உள்ளூர் நபர் ஒருவருடன் உறவிலிருந்ததாகவும், அதனால்தான் அவர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் கூறுவதைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தன் மனைவி ஒரு முக்கோணக் காதலில் இருந்ததாகக் கூறப்படுவதையும் அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதையும் தான் நம்பவில்லை என்றும் ஆலன் தெரிவித்துள்ளார்.
ஆலன், தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் நிலையில், Karen பிரான்சில் Jean-François Guerrier (74)என்னும் நபருடன் இணைந்து கஃபே ஒன்றை நடத்திவந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |