முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
முத்தரப்பு டி20 போட்டி
இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதன் 2 வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள் குவித்தது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பென்னட் 49 ஓட்டங்களும், சிக்கந்தர் ராசா 47 ஓட்டங்களும் குவித்தனர்.
ஜிம்பாப்வே அபார வெற்றி
163 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் இலங்கை அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |