24 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! நடிகை திரிஷா நோட்டீஸ்
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு 24 24 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, ஊடகங்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் 24 மணிநேரத்தில் முன்னணி செய்தி ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் மூலம் திரிஷா எச்சரித்துள்ளார்.
இதனை அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Trish (@trishtrashers) February 22, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |