"புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள்" அதிபர் ஜோ பைடனுக்கு டிரம்ப் அறிவுரை!
அமெரிக்காவை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிபர் ஜோ பைடனை அறிவுறுத்தி டொனால்டு டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து" நாட்டைப் பாதுகாக்க சில இஸ்லாமிய நாடுகளின் பயணத் தடையை மீண்டும் நிலைநாட்டுமாறு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டிரம்ப் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் "ஜோ பைடன் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், அவர் வெளிநாட்டு நாட்டு பயணத் தடை மற்றும் அதனுடன் சேர விரும்புவோர் மீதான அனைத்து சோதனைத் தேவைகளையும், நான் வெற்றிகரமாக அமல்படுத்திய அகதிகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்" என கூறினார்.
மேலும் "பயங்கரவாதிகள் உலகெங்கிலும் செயல்பட்டு ஆன்லைனில் ஆட்சேர்ப்பு செய்கிறார்கள். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் நம் நாட்டிற்கு வெளியே வைத்திருக்க, நாம் புத்திசாலித்தனமான, பொது அறிவுடன் விதிகளை வைத்திருக்க வேண்டும், எனவே ஐரோப்பா செய்த பல குடியேற்ற தவறுகளை நாம் மீண்டும் செய்யக்கூடாது. அதற்கும் மேலாக அமெரிக்கா தான் 'டிரம்ப்பின்' முன்னுரிமை'' என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது அறிக்கையில் கூறினார்.
டொனால்டு டிரம்ப் ஆட்சியின்போது ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத் தடை விதித்திருந்தார்.
ஆனால், ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்னர் அந்தத் தடைகள் அனைத்தையும் அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.