ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப்
Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டுள்ளார்.
கேம்ப் டேவிட் ஓய்விடத்தில்
ரியாத் விமான நிலையத்தின் மீது கரும் புகை சூழ்ந்து காணப்பட்ட காணொளி வெளியானதை அடுத்து, யேமன் ஹவுதிகள் தங்கள் தலைநகரை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்க முயன்றதை சவுதி அரேபியா சனிக்கிழமை உறுதி செய்தது.

ட்ரம்ப் முதலில் வார இறுதி முழுவதும் கேம்ப் டேவிட் ஓய்விடத்தில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7:57 மணிக்கு, ட்ரம்ப் Marine One ஹெலிகொப்டரில் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு எதிராக, பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, விரோத நடவடிக்கைகளில் ஹவுதிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
மேலும், இந்த இராணுவ மோதல் மிக வேகமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அதன் வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சண்டை தீவிரமடைந்த பின்னர் ஹவுதிகள் ரியாத் மீது இலக்கு வைத்தது, மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, அதிகாலையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்த அறிக்கையை மிகத் தாமதமாகவே வெளியிட்டது.
தாக்கியதாக ஹவுதிகள்
இதனிடையே, ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், யான்புவில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ'வின் (Aramco) வசதிகளையும் தாக்கியதாக ஹவுதிகள் முன்னதாக உரிமை கோரியிருந்தனர்.
ஹார்முஸ் நீரிணையை அடுத்து, மற்றொரு முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அதிகரித்து வரும் மோதல், சந்தைகளுக்குப் புதிய நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.