இந்தியா, பாகிஸ்தான் உட்பட.,ஏழு போர்களை நிறுத்தியதற்காக நோபல் பரிசு: டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் கூறியதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க கார்னர்ஸ்டோன் நிறுவனத்தின் நிறுவனரின் இரவு விருந்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏழு போர்களை நிறுத்தியிருப்பதாக கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறினார்.
மேலும் அவர் இதுவரை ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், அதற்காக நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "உலக அரங்கில் நாம் மீண்டும் ஒருமுறை, இதற்கு முன்பு ஒருபோதும் மதிக்கப்படாத அளவில் மதிக்கப்படும் விடயங்களை செய்கிறோம்.
நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம், போர்களை நிறுத்துகிறோம். எனவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நிறுத்தினோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |