ஜனாதிபதியாக தகுதியற்றவர்... தேர்தல் நெருங்கும் நிலையில் டொனால்டு டிரம்புக்கு கிடைத்த பேரடி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், கொலராடோவில் போட்டியிடும் தகுதியை டொனால்டு டிரம்ப் இழந்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிரம்ப் தகுதியற்றவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஜனாதிபதி பொறுப்புக்கு டிரம்ப் தகுதியற்றவர் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@afp
அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் என்றே கூறப்படுகிறது. கிளர்ச்சி அல்லது கிளர்ச்சியில் ஈடுபட்டால் அதிகாரிகள் பதவியில் நீடிக்க அனுமதிக்காத அமெரிக்க அரசியலமைப்பில் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு விதியை தற்போது டிரம்புக்கு எதிராக கொலராடோ நீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.
வாக்குகள் எண்ணப்படாது
ஆனால் இந்த தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், கட்டாயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டிரம்பின் பரப்புரை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
@afp
கொலராடோ மாகாணத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதால், அவருக்கு ஆதரவாக பதிவாகும் வாக்குகள் எண்ணப்படாது. இது நவம்பர் 5ம் திகதி முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |