இன்னும் சில மணி நேரங்கள் தான்... சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சிக்கலில் டொனால்டு ட்ரம்ப்
மோசடி வழக்கில் 454 மில்லியன் டொலர் செலுத்த டொனால்டு ட்ரம்புக்கு திங்கள்கிழமை வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சிக்கலை அவர் எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசடியில் ஈடுபட்டதாக
ஜனாதிபதி தேர்தலில் களம் கண்டுள்ள டொனால்டு ட்ரம்ப் தமது சொந்த பணத்தில் இந்த 454 மில்லியன் டொலர் தொகையை செலுத்த வேண்டும் அல்லது மேல்முறையீடுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமது சொத்து மதிப்பை அதிகரித்து, மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப் மீது தொடரப்பட்ட வழக்கிலேயே பிப்ரவரி 16ம் திகதி 454 மில்லியன் டொலர் செலுத்த நீதிபதி Arthur Engoron தீர்ப்பளித்திருந்தார்.
இந்த நிலையில், தமது ஆதரவாளர்களிடம் இருந்து பணம் திரட்டும் நடவடிக்கையை டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். ஆனால் மொத்த தொகையும் திரட்ட முடியாத சூழலில், அவரது பெயர் கூறும் Trump Tower உட்பட நியூயார்க் நகரில் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் பட்டியலில்
இந்த வழக்கானது அவரது மீதிருந்த அப்பழுக்கற்ற தொழிலதுபர் என்ற பிம்பத்தை மொத்தமாக உடைத்துள்ளது. Trump Tower உட்பட பல முதன்மையான கட்டிடங்களை எழுப்பி, பொருளாதார ரீதியாக பெரும் வெற்றி பெற்றவர் என்றே டொனால்டு ட்ரம்ப் தம்மை விளம்பரப்படுத்தி வந்துள்ளார்.
ஒருபக்கம் அவரது நிறுவனங்கள் பல பெரும் நெருக்கடியை எதிர்கொண்டும் வந்துள்ளது. தற்போது ட்ரம்ப் தரப்பு 454 மில்லியன் டொலர் தொகையை திங்கட்கிழமைக்குள் செலுத்த தவறினால், 60 அறைகள் கொண்ட குடியிருப்பு, Seven Springs எஸ்டேட், அவரது கோல்ப் மைதானம் உட்பட பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |