சட்டவிரோத புலம்பெயர்மக்கள் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேற சலுகை அளிக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவில் எல்லை நெருக்கடியைத் தீர்க்க உதவும் வகையில் சுயமாக வெளியேற விரும்பும் எந்தவொரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் பணம் மற்றும் விமான டிக்கெட்டை வழங்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேற்ற
ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போதே, சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
தற்போது, தமது நிர்வாகம் கொலைகாரர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் கவனம் செலுத்துகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு சுயமாக வெளியேறும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வ அனுமதி
அதாவது நாட்டை விட்டு சுயமாக வெளியேறும் நபர்களுக்கு ஊக்கத்தொகையும் அவர்களுக்கான விமான டிக்கெட்டும் அமெரிக்கா வழங்கும் என்றே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களில் திறமையானவர்கள் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கவும் தமது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் செயல்படும் ஹொட்டல்கள் மற்றும் வேளாண் பண்ணைகளில் தொழிலாளர்கள் தேவை என்பதால், அவர்கள் பரிந்துரை செய்யலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |