1,600 பேர் ஒரே நேரத்தில் பணிநீக்கம்! ட்ரம்பின் அதிர்ச்சி முடிவால் ஊழியர்கள் கலக்கம்
USAID அமைப்பைச் சேர்ந்த 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
USAID
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி முடிவுகளின் அடுத்தபடியாக பணிநீக்க உத்தரவையும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருவது USAID. இது உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இந்த பணிகளுக்கான நிதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகிறது.
ஆனால், இந்த அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அத்துடன் அந்த அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
1,600 பணியாளர்கள்
இதனை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவியை நிறுத்தும் ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தாலும், பின்னர் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸின் உத்தரவால் தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் உலகளவில் USAID அமைப்பைச் சேர்ந்த சுமார் 1,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும் அவரது நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |