பதவிக்கு வரும் முதல் நாளில் அந்த நாடுகளுக்கு தடை உத்தரவு: டொனால்டு ட்ரம்ப் உறுதி
அமெரிக்க ஜனாதிபதியாக தாம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய நாடுகளுக்கு தடை உத்தரவு விதிக்கப்படும் என மீண்டும் உறுதி அளித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளை
சனிக்கிழமை குடியரசுக் கட்சியின் யூத மாநாட்டில் பேசிய டொனால்டு ட்ரம்ப் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளை எமது நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று குறிப்பிட்ட ட்ரம்ப்,
பயணத் தடை உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதல் நாளில் இருந்தே, பயணத் தடையை மீட்டெடுப்பேன் என்றார். 2017ல் தனது ஜனாதிபதி பதவியின் தொடக்கத்தில், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், ஈராக் மற்றும் சூடானில் இருந்து வரும் பயணிகளின் நுழைவுக்கு ட்ரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
ஆனால் இந்த உத்தரவு ஒரு மதக் குழுவிற்கு எதிராக பாரபட்சமானது என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் தடை நீடித்தது. ஜனாதிபதி ஜோ பைடன் 2021ல் பதவியேற்ற முதல் வாரத்திலேயே தடையை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |