பிரபல நாட்டை பாராட்டி.. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நைஜீரியாவை பாராட்டி புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், தங்கள் நாட்டு ஜனாதிபதியை தடை செய்த ட்விட்டரை தடை செய்த நைஜீரியாவுக்கு பாராட்டுக்கள்.
அனைத்து தரப்பின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும், பேச்சு உரிமை அனுமதிக்காத ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களை இன்னும் பல நாடுகள் தடை செய்ய வேண்டும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் போட்டி நிறுவனங்கள் வளர்ந்து அவர்களின் இடத்தை பிடிப்பார்கள்.
அவர்களே தீயவர்களாக இருந்தால்? நன்மை தீமைகளை ஆணையிட அவர்கள் யார்?
ஒருவேளை நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நானே இதை செய்திருப்பேன் என டிரம்ப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.