தன்னை இயேசுவாக காட்டிய ட்ரம்ப்- கிறிஸ்தவ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது சமூக ஊடகமான Truth Social-ல் தன்னை இயேசு கிறிஸ்துவாக காட்டும் படத்தை பகிர்ந்ததால் கடும் சர்ச்சை எழுந்தது.
அந்த படத்தில் ட்ரம்ப் வெள்ளை மற்றும் சிவப்பு ஆடையில், நோயாளியை குணப்படுத்துவது போல் கைகளை வைத்திருப்பது போல காட்சியளித்தது. அவரின் கைகளில் ஒளிக்கதிர்கள் வீசும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த பதிவு Orthodox Easter நாளில் வெளியானதால், பல கிறிஸ்தவ ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன், “இது முற்றிலும் தவறானது, நான் இதை கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார். Daily Wire பத்திரிகையின் கிறிஸ்தவ எழுத்தாளர்கள், “இது கடும் அவமதிப்பு” என்று கூறினர்.

ட்ரம்ப், பத்திரிகையாளர்களிடம், “அந்த படம் என்னை மருத்துவராக காட்டுகிறது. நான் மக்களை குணப்படுத்துகிறேன்” என்று விளக்கம் அளித்தார். ஆனால் பலர் இதை மதத்தை அவமதிக்கும் செயல் எனக் கண்டித்தனர்.
மேலும், New York Times எழுத்தாளர் டேவிட் ஃப்ரென்ச், “இது முற்றிலும் தவறான செயல்” என்று விமர்சித்தார். முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் ஜஸ்டின் அமாஷ் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த சர்ச்சை, ட்ரம்ப் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கிடையிலான உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. குறிப்பாக, போப் லியோ XIV, அமெரிக்காவின் ஈரான் போருக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், ட்ரம்ப் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப், தனது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சர்ச்சை அவரின் அரசியல் ஆதரவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |