பீலேவை விட மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர்: டொனால்ட் டிரம்ப் கருத்து
பீலேவை விட மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதல் முறை கோப்பை வென்ற இன்டர் மியாமி
அமெரிக்காவில் நடந்த மாஸ்டர் லீக் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணி லயோனல் மெஸ்சி தலைமையில் களமிறங்கியது.
இந்த தொடரில் இன்டர் மியாமி அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றும் அசத்தியுள்ளது.

டிரம்பிற்கு பரிசளித்த மெஸ்ஸி
MLS சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து மெஸ்ஸி உட்பட இன்டர் மியாமி அணி வீரர்கள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பிங்க் நிற கால்பந்தையும், 47 எண் கொண்ட ஜெர்சியையும் மெஸ்சி பரிசாக வழங்கினார்.
மெஸ்சியா? பீலேவா?

அப்போது, வெள்ளை மாளிகைக்கு வருக மெஸ்ஸி, என்னுடைய மகன் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன், கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய ரசிகன், அவன் என்னிடம் இன்று வெள்ளை மாளிகைக்கு யார் வருகிறார் என்று தெரியுமா என கேட்டான்? நான் எனக்கு பெரிய வேலைகள் எதுவும் இல்லை என்று கூறினேன், உடனே கால்பந்து வீரர் மெஸ்ஸி வெள்ளை மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.
கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ சிறந்த வீரர், நீங்களும் சிறந்த வீரர்.
மெஸ்சியா? பீலேவா? என்றால் பீலேவை விட மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |