டிரம்ப்பின் தடையால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் MLC கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில் சிக்கல்
டிரம்ப்பின் பயண தடையால் MLC தொடரில் பங்கேற்பதில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப்பின் பயண தடை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததோடு, 7 நாடுகளைச் சேர்ந்தவர்களின் நுழைவிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
டிரம்பின் இந்த முடிவு, ஆப்கானிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூன் 12 ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 ஆம் திகதி வரை, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்னும் T20 தொடர் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சிக்கல்?
டிரம்பின் தடையால், நூர் அகமது, ரஷித், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட 7 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் ஜூன் 9 முதல் இந்த அமுலுக்கு வர உள்ளதால், அதற்கு முன்னதாக வீரர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர MLC நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதே போல், இந்த தடை உத்தரவில் ஒலிம்பிக், உலகக்கோப்பை அல்லது வெளியுறவுத்துறை செயலாளரால் வகைப்படுத்தப்பட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வு ஆகியவற்றில் பங்குபெறும் எந்த ஒரு அணியின் எந்த ஒரு வீரருக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவால் MLC தொடர் முக்கிய விளையாட்டு நிகழ்வு என வகைப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீரர்களின் அமெரிக்கா வருகை சாத்தியமாகும் என MLC நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |