அதி நவீன ட்ரோன்கள், ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க திட்டம்: 893 பில்லியன் டொலர் கோரும் ட்ரம்ப்
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பாதுகாப்பு நிதிநிலை அறிக்கையில் இராணுவ வீரர்களுக்கான ஊதிய உயர்வு, அதிக உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கான நிதியை ஒதுக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு தொழில்துறை
அதே நேரத்தில் கடற்படையில் வேலைகளைக் குறைத்து, அதிக எண்ணிக்கையில் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதை குறைத்து பணத்தை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதன் பொருட்டு 892.6 பில்லியன் டொலர் தேவைப்படும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், எரிசக்தித் துறையால் மேற்கொள்ளப்படும் அணு ஆயுதங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நிதியை அதிகரிக்கிறது.
இந்த நிதியானது, இந்தோ-பசிபிக் பகுதியில் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், பாதுகாப்பு தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
2026ல் பாதுகாப்புக்கான நிதிநிலை அறிக்கையில், F-35 போர் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க ட்ரம்ப் கோரியுள்ளார். அத்துடன் 3 போர் கப்பல்கள் மட்டுமே புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதி நவீன ட்ரோன்களுக்கு நிதி
ஆனால் 15 கப்பல்களுக்கான அனுமதியை இன்னொரு கோரிக்கையில் தனியாக முன்வைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இராணுவ வீரர்களுக்கு 3.8 சதவீத ஊதிய உயர்வு கோரப்படுகிறது, ஆனால் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பழைய ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் செலவுகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோ பைடன் முன்வைத்துள்ள நிதிநிலை அறிக்கையில், F-35 போர் விமானங்களில் 68 எண்ணிக்கை அவர் கோரியிருந்தார். ஆனால் ட்ரம்ப் தற்போது 47 போர் விமானங்கள் மட்டுமே கோரியுள்ளார்.
ட்ரம்பின் கோரிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் பெரும் விவாததை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஜெலென்ஸ்கியின் இராணுவம் ட்ரோன்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்தே, ட்ரம்பும் தற்போது போர் விமானங்களுக்கு செலவிடுவதை விட அதி நவீன ட்ரோன்களுக்கு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |