அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்; ராணுவத்தை களமிறக்கும் டிரம்ப் - கலிபோர்னியா ஆளுநர் கைதா?
அமெரிக்காவில் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் கலிபோர்னியா ஆளுநர் கைது செய்யப்படுவார் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக 2வது முறை பதவி ஏற்ற பின்னர், பிற நாட்டவர் குடியேற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றிகளை வெளியேற்றுதல் ஆகியவற்றில் கடுமை காட்டி வருகிறார்.
சமீபத்தில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேற்ற சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறிய 44 பேரை கைது செய்தனர்.
இதனை கண்டித்து, அங்கு பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறி, சாலையில் நிறுத்தப்பட்ட கார்கள் எரிக்கப்பட்டன. காவலர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து, போராட்டங்களைக் கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் மிகை வெளிச்ச குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆளுநர் கைது?
போராட்டம் கட்டுக்குள் வராத நிலையில், ஆளுநரை கேட்காமலே ராணுவத்தின் கீழ் வரும் 2000 பாதுகாப்புப் படையினர் மற்றும் 700 கடற்படை வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பினார். தேவைப்பட்டால், ராணுவம் களமிறக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் தேசிய காவல்படையை அனுப்பியது சட்டவிரோதமானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம் கண்டித்துள்ளார்.
இந்த கண்டனத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் கலிபொர்னியா கவர்னர் கெவின் நியூசமை கைது செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறையை சேர்ந்த டாம் ஹோமனிடம் பரிந்துரைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உள்நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு ட்ரம்ப்தான் காரணம் என கலிபோர்னியா மாகாணம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது. இது கிட்டத்தட்ட உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |