அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயன்படுத்திய கொரோனா மருந்து அறிமுகம்... அதன் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்புக்கு அளிக்கப்பட்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. உலகின் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நாடுகள், இப்போத் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றன.
அதற்கு முக்கிய காரணம் அங்கு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது தான், இதனால் இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுவிட்டது. அதன் படி கடந்த 10-ஆம் திகதி இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கேஸிர்விர்மாப், இம்டெவிமாப்' ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த மருந்து குறித்து ரோச் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறோம். இரு மருந்துகள் கொண்ட பாக்கெட்டின் அதிகபட்ச விலையாக 1,19,500 ரூபாய் ஆக நிர்ணயித்துள்ளளோம்.
இதை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் ஒரு டோஸ் மருந்தின் விலை 59,570 ரூபாய், ஒரு லட்சம் டோஸ் மருந்துகள் வாங்கினால், 2 லட்சம் நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்' என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் உடல் எடை 40 கிலோவுக்குக் குறைவாக இருப்போர் போடலாம்.
கொரோனா உறுதி செய்யப்பட்டபின், அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் செலுத்தலாம். இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரைப் காக்க முடியும், உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.