உயிர் போனால் போனதுதான்... பிரித்தானியா மகாராணியின் இறுதிச்சடங்கில் நேரலையில் ஒலித்த அந்த மர்மக் குரல்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து, அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திலிருந்து புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.
அதை பல ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருக்க, திடீரென ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.
உயிர் போனால் போனதுதான்...
மரணம் திருப்பமுடியாதது, அல்லது உயிர் போனால் போனதுதான், திரும்ப வராது என்னும் அர்த்தத்தில் ஒரு பெண், திகில் திரைப்படங்களில் பேசுவதுபோல, ‘That death is irreversible and the fact that she's...’ என்று கூறுவதை தொலைக்காட்சி நேரலையில் கேட்க முடிந்தது.
During Queen Elizabeths funeral procession a female voice came into the news-feed and said the following: “The death is irreversible, and the fact that she is trapped...” Before being cut-off. pic.twitter.com/99wAUZGYtT
— Historic Vids (@historyinmemes) April 10, 2024
அந்த காட்சி எக்ஸில் வெளியான நிலையில், அதை 1.5 மில்லியன் பேர் பார்வையிட்டு வியப்படைந்ததுடன், அது யாருடைய குரல் என்பது குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது, அந்தக் குரல் தொலைக்காட்சி நிலையத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஒரு பெண்ணுடைய குரல் என தற்போது கருதப்படும் நிலையில், அதை அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையம் உறுதி செய்யவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |