நீயா? நானா? கடம்பூர் ராஜுவுக்கு கடும் போட்டிக் கொடுக்கும் தினகரன்! நூலிழையில் வெற்றி மாற வாய்ப்பு
தமிழகத்தில் எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில், தினகரன் மற்றும் கடம்பூர் ராஜுவுக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அதிமுகவில் எப்போதும் அசைக்க முடியாத நபராக இருந்தவர் தான் சசிகலா, அவர் சிறைக்கு சென்ற பின் அதிமுக-வின் முக்கிய அமைச்சர்கள் பலரும் சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு திரும்புவதை விரும்பவில்லை.
இதன் காரணமாகவே சசிகலா விடுதலையான பின்பு கூட, அதிமுகவினர் யாரும் அவரை சந்திக்கவில்லை, அப்படி சந்தித்த நபர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
நம்மால் அதிமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதற்காக சிசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் தினகரனோ நான் இதை விட மாட்டேன், என்னுடைய பலத்தை அதிமுகவிற்கு காட்டுவேன், அவர்களுக்கு பாடம் கற்பிப்பேன் என்ற வகையில் தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் களம் இறங்கினார்.
ஆனால், அவர் கட்சியினர் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்றால், பெருவாரியான வாக்குகளை பிரித்துவிட்டனர். அந்த வகையில், தற்போது தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் கடம்பூர் ராஜுவுக்கு தினகரன் கடும் போட்டியளித்து வருகிறார்.
சற்று முன் வரை வெளியான தகவலின் படி டி.டி.வி தினகரனை விட கடம்பூர் ராஜு வெறும் 19 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால் இந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும், அது ஒரு நூலிழையில் பெற்ற வெற்றியாக இருக்கலாம்.