படப்பிடிப்பு தளத்தில் நடிகை தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரமா.? சக நடிகர் கைது
நடிகை துனிஷா ஷர்மாவின் தற்கொலை வழக்கில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை
பாலிவுட்டில் ஃபிட்டூர், பார் பார் தேகோ, கஹானி 2, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல துனிஷா சர்மா (20), சனிக்கிழமையன்று படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக நடிகரான ஷீசன் முகமது கான் கைது
Instagram-Tunisha Sharma
இந்நிலையில், நடிகை துனிஷா ஷர்மாவின் சக நடிகரான ஷீசன் முகமது கான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவரை 4 நாள் பொலிஸ் காவலில் வைக்க மும்பை வசாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு சக நடிகரான பார்த் ஜூட்ஷி, சம்பவம் குறித்து விசாரணைக்காக காவல்துறையினரால் அழைக்கப்பட்டார்.
காதல் விவகாரம்
[1QPMXG ]
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR), இரண்டு நடிகர்களும் உறவில் இருந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும் தெரியவந்தது. துனிஷா ஷர்மா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, அதுவே அவரை விளிம்பிற்குத் தள்ளியது என்று சந்தேகிக்கப்படுகிறது.
பார்த் ஜூட்ஷி
காவல் நிலையத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேசிய பார்த் ஜூட்ஷி, சம்பவத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் துனிஷா இல்லை என்று கூறுகிறார். தன்னை பொலிஸார் விசாரணைக்கு அழைத்ததாகவும், இந்த வழக்கு குறித்து தன்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது துனிஷாவின் தனிப்பட்ட விடயம் என்றும் கூறினார்.
பொலிஸார் விசாரணை
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனையில் துனிஷாவின் உடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது, அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகாக்கள் கூறினர், ஆனால் பொலிஸார் சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
அவரது மரணம் குறித்து கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.