பண மாலையால் அமைச்சரை கௌரவித்த தவெக நிர்வாகி.., மன்னிப்பு கேட்டு விஜய்க்கு கடிதம்
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை போட்டு வரவேற்ற நிலையில் தவெக நிர்வாகி விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
விஜய்க்கு மன்னிப்பு கடிதம்
தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் கடந்த 8-ம் திகதி அன்று புதுமனை புகுவிழா நடத்தினார். இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பண மாலை போட்டு பாரதிதாசன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக அரசை விமர்சித்து வரும் நிலையில் தவெக நிர்வாகி செயல்பாடு குறித்து விஜய்க்கு கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை தெற்கு செயலாளர் பாரதிதாசன் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "புதுமனை புகுவிழாவுக்கு என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவர் அமைச்சர் என்பதால் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன்.
இதற்காக மனம் வருந்தி தலைவர் விஜயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |